Sunday, September 23, 2007

தமிழ் எந்தன் உயிருக்கு நேர்

தமிழைப்பற்றிப் பேச்சு வந்தவுடன் எனக்கு என் பள்ளிப்பருவம்தான் ஞாபகம் வருகிறது. நான் (1967க்கு முன்) பள்ளியில் படித்த நாட்களில் எனக்கு தன்டபாணி தேசிக‌ர் என்னும் த‌மிழ் ஆசிரிய‌ர் இருந்தார்.அவ‌ர் எங‌ள் எல்லொரையும் தூய‌ த‌மிழில் பேசச்சொல்லி மிக வற்புறுத்துவார்.இலக்கணபாடங்களை மிக அழகாக உவமையுடன் எடுதுக்கூறுவார்.கையெழுது கூட எப்படி எழுதுவது என்று மிக அழகக எடுத்துக்கூறி எழுத வைப்பார்.அவருக்கும் சமசஸ்க்ருத ஆசிரியருக்கும் அடிக்கடி விவாதம் வந்து விடும்.மாணவிகளில் சிலர் அந்த த‌மிழ் ஆசிரியரின் தீவீர பகதைகள் என்றால் மிகை ஆகாது.
வீட்டில் எல்லொரும் வெறுப்படையும் வகையில் தமிழ் ஆசிரியரைப்பற்றியும் அவர் கூறிய கருத்துக்களையும் விலா
வாரியாகப்பெசுவது வழக்கமாயிருந்தது.இப்போது நினைத்தாலும் சிரிப்பு வரும்.
உறவினர்களுக்குக் கடிதம் எழுதும்போது நான் கமலா என்று கையெழுத்திடாமல் செந்தாமரை என்று கையெழுத்து போடுவேன் என்றால் எவ்வளவு தீவிரமக நாங்கள் தமிழ் மீது பற்று வைத்திருந்தோம் என்று புரியும்.உறவினர்கள் ஒரு மாதிரியாகப் பார்க்கும் அளவுக்கு இந்த த‌மிழ் பற்று இருந்தது என்றால் மிகையாகாது.
அப்பிடி இருந்த என்னை இந்த சென்னை மாந‌கரம் இப்பிடி மாற்றி விட்டது.
முதலில் சென்னை வந்தவுடன் நான் கற்றுக்கொன்ட முதல் சொல் கிருஷ்ணாயில்.மண்ணெண்ணை என்று அழகாக சொல்லிக்கொன்டு சென்னை வந்த என்னை கெரொசின் என்ற ஆங்கில‌ வார்த்தையின் திரிபான கிருஷ்ணாயில் பிடித்தது முதலில்.கொஞ்சம் கொஞ்சமாக சென்னைத்தமிழ் பயின்றோம்
மெதுவாக சென்னை வாசியாகி சென்னைத்தமிழுக்கு பழக்கப்பட்ட எங்களை
திரும்ப நல்ல தமிழ் கற்றுக்கொள் என்று சொன்னல் எப்பிடி திடீரென்று மாறுவது .

1 comment:

Unknown said...

அப்ப இப்போ தமிழ் உங்கள் மயிருக்கு நேர் - சரிதானே ???