Monday, March 10, 2008

ஒரு தாயின் மரணம்

மரணம் நம் சொந்த பந்தங்களை நம்மிடமிருந்து பிரிக்கிறது என்பதை மட்டும் நாம் நினைக்கிறோம். மரணத்தின் மறுபக்கம் என்ன?நம் அன்புக்குறியவர்களை நம்மிடமிருந்து பிரிக்கும் மரணத்தின் மறுபக்கம் ஒன்று உள்ளது என்பது நாம் பலரும் அதிகம் யோசிக்காத ஒன்று. என் தாயின் மரணம் எனக்கு அதை மிக நன்றாகக்காட்டியது.
அதிகம் பேசாத மென்மையான (புதுமைப்பெண்களிடமிருந்து சுத்தமாக மாறுபட்ட)என் அன்புத்தாயின் மரணம் போன சனி இரவு நிகழ்ந்தது.இப்படிக்கூட இறக்க முடியுமா என்ரு தோன்றியது எனக்கு?
அவர் எங்கோ அடுத்த ஊருக்குப்போவது போல இருந்தது,தொலை தூரப்பயணம் போவது போலக்கூட இல்லை.
மரணத்தை ஆவலுடன் அணைத்துக் கொள்ள மனம் ஆசைப்படுமோ? என் அம்மாவின் மனம் ஆசைப்பட்டது.
அவ‌ர் இத‌ய‌ம் விரிவடைந்த‌வ‌ர்(heart enlargement)இர‌த்த‌ அழுத்த‌ம் உள்ள‌வ‌ர். ஆனால் ப‌ல‌கால‌மாக‌ இர‌த்த‌ அழுத்த‌மும் ,heart enlargement ம் இருந்து வந்த‌‌தால் மாத்திரைக‌ள் சாப்பிட்டு வந்தார்.போன‌ மாத‌ம் முத‌ல் உட‌ல் நிலை ந‌ல‌ம் குறைய‌ ஆர‌ம்பித்து மிக‌ ப‌ல‌கீன‌மாக‌ இருந்தார்.
மிக‌ ப‌ல‌கீன‌மாக‌ ஆகி விட்ட‌பின் ந‌ட‌மாட்ட‌ம் குறைந்த‌‌து. உட‌ல் ந‌ல‌ம் குறைந்ததாலும் மனந‌‌ல‌ம் மிக்க‌வ‌ராக‌ இருந்தார்.தன் கண்ணையும் தானமாகக்கொடுக்கச் சொல்லி விட்டுப்போன எந்தாயின் மன திடத்தை எண்ணிஎண்ணி வியக்கிறேன்!
தன் பிள்ளைகளுக்குத் தொல்லை தராமல் தான் கடவுளிடம் போய்ச்சேர ஓயாமல் பிரார்த்திதார்.
மாலை நாலு மணியளவில் படுக்கையில் கையை ஊன்றி எழுந்தார்.கலைந்திருந்த கூந்தலை சரி செய்யச் சொன்னார்.புடவையைச்சீர் செய்து கொண்டார்.பக்கத்திலிருந்த எல்லா மகன் மகள்களையும் பார்த்தார்.அனைவரையும் பார்த்து ஒவ்வொருவராக அருகிலழைத்தார்.ஒவ்வொருவரின் தலையில் கையை வைத்து ஆசிர்வாதம் வழங்கினார்.வாயார வாழ்த்தினார்.மிகவும் களைப்பாக இருப்பதாகக் கூறிவிட்டு எவரும் அழக்கூடாது எனக்கூறினார்.அதற்குப் பின் சரியாக ஒரு மணி நேரத்தில் சுவாசம் நின்றது.வலி என்றும் பிரிகிறோமே என்ற துன்பமென்றோ கொஞ்சம்கூடச் சொல்லவில்லை.எல்லொரும் தன்னால் துன்பப்படக்கூடாது என்றுமட்டும் நினைத்த என் தாயின் மரணம் என்னை உலுக்குகிறது.எங்கோ பக்கத்திலுள்ள ஊருக்குப்போவது போல எல்லொரிடமும் சொல்லிக்கொண்டு கிளம்பிப்போன என் தாயைப்போல மரண பயமின்றி மரணத்தை ஆவலுடன் தழுவியவர்கள் எவரும் உண்டோ?

1 comment:

வல்லிசிம்ஹன் said...

என் தாயின் மாரணமும் இப்படித்தான். அவள் தன் மகனை இழந்து விட்டாள். மரணத்தை வரவேற்றாள்.

தெளிவாகவே, வலி இருந்தாலும் , இரண்டு வாரம் நோய்வாய்ப்பட்டு வாயால் அரற்றாமல் போய்ச் சேர்ந்தாள்.